கல்லாங் எம்ஆர்டி அருகே டாக்ஸி மோதியதில் 85 வயது பெண் உயிரிழப்பு!

0

சிங்கப்பூர் – ஜூன் 10 ஆம் தேதி கல்லாங் எம்ஆர்டி நிலையம் அருகே கம்ஃபோர்ட் டாக்ஸி மோதியதில் 85 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். லோராங் 1 கேலாங் வழியாக காலை 10:35 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அந்த பெண் உணர்வற்ற நிலையில் தன் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் பின்னர் அவர் மரணமடைந்தார்.

68 வயதான டாக்ஸி டிரைவர், கவனக்குறைவான ஓட்டுதல் காரணமாக மரணம் ஏற்பட்டதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கம்பர்ட் டெல்க்ரோ என்ற டாக்ஸி நிறுவனம், இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துள்ள அந்த நிறுவனம், போலீசாருடன் முழுமையாக ஒத்துழைக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.