வாகன விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த இளைஞர் பலி!

0

சிங்கப்பூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (பிப்ரவரி 24) மதியம் 1:20 மணியளவில் செரம்பான்/போர்ட் டிக்சன் சந்திப்புக்கு அருகில் நடந்துள்ளது.

நெகிரி செம்பிலான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் கண்காணிப்பாளர் முஹம்மது ஜாகி ரமாட், கார் ஓட்டுநர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், வாகனம் தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் காரில் சிக்கிய இளைஞனை மீட்க சினவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் விரைந்து செயல்பட்டனர். ஆனால் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர்கள் உறுதி செய்தனர்.

பாதிக்கப்பட்டவர் ஜோகூர் பாருவில் இருந்து வடக்கு நோக்கி பயணித்ததாக நம்பப்படுகிறது. மேலதிக பரிசோதனைக்காக அவரது உடல் நெகிரி செம்பிலானில் உள்ள துவாங்கு ஜாஃபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.