சிங்கப்பூரில் பணியிட விபத்து இறப்புகள் சரிவு கடந்த ஆண்டு வரலாற்றிலேயே மிகக் குறைவு!

0

2023-ம் ஆண்டு, சிங்கப்பூரில் பணியிட விபத்துகளால் ஏற்படும் இறப்புகள் வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளன.

ஒவ்வொரு லட்சம் தொழிலாளர்களுக்கும் வெறும் ஒரு விபத்து மரணம் என்ற விகிதத்தை சிங்கப்பூர் எட்டியுள்ளது.

கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறைகளில் பெரிய அளவிலான விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளன.

ஆனால், உற்பத்தித் துறையில், இயந்திர விபத்துகள் மற்றும் விழுந்து ஏற்படும் காயங்களினால் விபத்து விகிதம் சற்று உயர்ந்துள்ளது. மொத்தத்தில், கடுமையான விபத்துச் சம்பவங்கள் அனைத்திலும் குறைவு ஏற்பட்டுள்ளது (590 சம்பவங்கள்).

கட்டுமானத்துறையில், இடிப்பு வேலைகளின் போது ஏற்பட்ட விபத்துகளால் 18 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து மற்றும் சேமிப்பு கிடங்கு துறைகளிலும் விபத்துகள் குறைந்திருக்கின்றன.

உற்பத்தித் துறையில், குறிப்பாக உலோகப் பொருட்கள் தயாரிப்பு பிரிவில் பெரிய அளவிலான விபத்துக்கள் அதிகரித்துள்ளன.

தொழிலகப் பாதுகாப்பை மேம்படுத்த, உற்பத்தித் துறைக்கும் ‘குறைப்புள்ளி முறை’யை (demerit point system) அறிமுகப்படுத்துவது, உயர் ஆபத்துள்ள தொழில்களின் தலைமை நிர்வாகிகள் பாதுகாப்பு பயிற்சியில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், கட்டுமான தளங்களில் ஆபத்துகளை சிறப்பாகக் கண்காணிக்க, வீடியோ கண்காணிப்பு முறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.

சவால்கள் இருப்பினும், 2024-ம் ஆண்டில் சிங்கப்பூரின் பணியிடப் பாதுகாப்பை மேலும் உயர்த்துவதே அரசின் இலக்காக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.