சிங்கப்பூரில் 2024 இல் என்னென்ன Pass, Permit க்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது! முழு விபரம் இதோ!
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வேலைக்கு பலவிதமான Pass மற்றும் Permitகளின் மூலம் வருகிறார்கள். அவர்களுடைய அனுபவம், திறன்கள் மற்றும் அவர்கள் பெறும் Pass இன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
அனுபவமும் திறன்களும் அதிகரிக்கும்போது சம்பளமும் அதிகரிக்கும். இதனால், வெளிநாட்டு ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கலாம்.
சிங்கப்பூருக்கு EPass, S Pass, NTS Permit, Shipyard Permit, PCM Permit, EntrePass, Work Permit, ONE Pass போன்ற பல்வேறு Passகளின் மூலம் வர முடியும். இதனால், திறமை, கல்வி தகைமை, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி ஏற்படும். S Passயில் Financial Services Sector மற்றும் General Sector என இரண்டு பிரிவுகள் உள்ளன.
Financial Services Sector இல் மாதாந்தம் $3,650 SGD மற்றும் General Sector இல் $3,150 SGD வழங்கப்படுகிறது. EPassயிலும் Financial Services Sector மற்றும் General Sector என இரண்டு பிரிவுகள் உள்ளன. இங்கு Financial Services Sector இல் $5,500 SGD மற்றும் General Sector இல் $5,000 SGD மாதாந்தம் வழங்கப்படுகிறது.
2025 ஜனவரி 1 முதல் EPass இல் Financial Services Sector பணிபுரிபவர்களுக்கு $6,200 SGD மற்றும் General Sector இல் $5,600 SGD ஆக சம்பள உயர்வு வழங்கப்படும்.
NTS Permit மூலம் சிங்கப்பூர் வருபவர்களுக்கு மாதாந்தம் $2,000 SGD வழங்கப்படுகிறது. S Pass Quota கிடைக்காதவர்களே NTS Permit மூலம் சிங்கப்பூர் வருகிறார்கள். Shipyard Permit க்கு $1,200 SGD வரை வழங்கப்படுகிறது, மேலும் Overtimeக்கு ஏற்ப அதிகப்படுத்தப்படும்.
Skill Test அடிப்படையிலான கட்டுமான வேலைகளுக்கு $800 SGD முதல் $1,500 SGD வரை வழங்கப்படுகிறது. அனுபவம் கூடுவதால் சம்பள உயர்வு உண்டு. Process, PCM வேலைகளுக்கு $500 SGD முதல் $1,500 SGD வரை வழங்கப்படுகிறது. PCM, Shipyard, Work Permit க்கு நாளாந்தம் அல்லது மாதாந்தம் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும், இது கம்பனிகளின் அடிப்படையில் மாறுபடும்.
பல வேலைகளில் Overtime வழங்கப்படுகிறது, இதனால் அடிப்படை சம்பளத்தை விட அதிகமாக பெற முடியும். சிங்கப்பூரில் அடிப்படை சம்பளத்தை விட குறைவாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், சிங்கப்பூரில் செலவுகளும் அதிகரித்துள்ளதால், செலவு மற்றும் சம்பளத்தை கருத்தில் கொண்டு பொருத்தமான வேலைக்கு சிங்கப்பூர் வருவது சிறந்தது.