ரிவர் வேலியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து 150 பேர் வெளியேற்றம்!
ஆகஸ்ட் 21 அன்று ரிவர் வேலியில் உள்ள கிரேட் வேர்ல்ட் சர்வீஸ்டு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது, இதனால் 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மாலை 4.50 மணியளவில் 18-வது மாடியில் உள்ள யூனிட்டில் தீ பற்றியது , தீயணைப்பு வீரர்கள் வாட்டர் ஜெட் மூலம் தீயை அணைத்தனர். சமையலறை முற்றாக தீயில் எறிந்து விட்டது, மீதமுள்ள அடுக்குமாடி வெப்பம் மற்றும் புகையால் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக, தீ விபத்தின் போது யாரும் உயிர் சேதம் இல்லை. இருப்பினும், அருகில் வசிப்பவர்கள் இருவர் புகையை சுவாசிப்பதற்காக சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே குடியிருப்பாளர்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கவனிக்காமல் சமைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக நம்புகிறது. அவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும், சிறிது நேரம் கூட சமையலை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள் என்றும் அறிவுறுத்தினர்.