துவாஸ் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து!

0

சிங்கப்பூரின் துவாஸில் உள்ள ஒரு தொழிற்துறை கட்டிடத்தில் மார்ச் 8 அன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.

10 துவாஸ் அவென்யூ 18A இல் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பிடித்தது, அங்கு வண்ணப்பூச்சு பொருட்கள் சேமிக்கப்பட்டன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பு ஆறு பேர் கட்டிடத்தை விட்டு வெளியேறினர், அவர்களில் இருவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படவில்லை.

தீயணைப்புத் துறையினர், எஞ்சிய தீப்பிழம்புகளைத் தடுக்க தண்ணீர் பிரயோகம் செய்து அப்பகுதி முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடம் அவா-செம் இண்டஸ்ட்ரியலுக்கு சொந்தமானது, இது சுத்தம் மற்றும் கழிவு மேலாண்மையை கையாளும் நிறுவனமாகும்.

Image Civil Defence Force.

Leave A Reply

Your email address will not be published.