சிங்கப்பூர் பாலாம் சாலை மெக்பெர்சன் அடுக்குமாடி குடியிருப்பில் 2.7 கிலோ கஞ்சாவுடன் 33 வயது நபர் கைது!

0

சிங்கப்பூர் பாலாம் சாலை அருகேயுள்ள வீடொன்றில், சுமார் 2.7 கிலோ கஞ்சா இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 33 வயது ஆண் ஒருவர் ஜூன் 23ஆம் தேதி மாலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் (CNB) கைது செய்யப்பட்டார்.

அந்த வீட்டில் பல இடங்களில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் \$65,000 ஆகும் என்றும், இது ஒரு வாரத்திற்கு சுமார் 390 பேர் பயன்படுத்தக்கூடிய அளவாகும் என்றும் CNB தெரிவித்தது.

CNB தனது அறிக்கையில், கஞ்சா சிங்கப்பூரில் கடுமையாக தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் எனவும், அதை வைத்திருப்பதும், பயன்படுத்துவதும், விற்பதும், நாட்டுக்குள் கொண்டு வருவதும் குற்றமாகும் எனவும் நினைவூட்டியது.

மேலும், 500 கிராம் கஞ்சாவைத் தாண்டி கடத்தலில் சிக்குபவர்கள் மரணதண்டனை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.