Toa Payoh டோ பாயோவில் தீவிபத்து இருவர் உயிரிழப்பு, மூவருக்கு சிகிச்சை!

0

சிங்கப்பூர் – டோ பாயோ லோரோங் 1-இல் உள்ள பிளாக் 173-ல் ஜூலை 22 மாலை ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்தனர்.

இந்த தகவல் மாலை 7.30 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் ஹாலில் தீப்பிடித்திருந்தது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று, புகை நிரம்பிய வீட்டுக்குள் நுழைந்து தீயை அணைத்தனர். அவர்கள் உள்ளே சென்றபோது, இரண்டு பேர் அசையாமல் கிடப்பதைக் கண்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உதவியாளர் உறுதி செய்தார்.

அருகில் உள்ள பிற வீடுகளில் இருந்த மூன்று பேர் புகைச் சுவாசித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை; SCDF மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இடத்தில் எடுத்த வீடியோவில் கட்டிடத்தின் வெளிப்புறம் கருகியதையும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் காட்சிகளும் காணப்பட்டன.

Leave A Reply

Your email address will not be published.