துவாஸ் சோதனைச் சாவடியில் 2,200 இ-சிகரெட்டுகள் பறிமுதல்!
செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5) துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசிய சரக்கு லாரி ஒன்றை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது, அந்த லாரியின் ஓட்டுநர் அறை மற்றும் கருவிகள் வைக்கும் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,200 இ-சிகரெட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த பொருட்களை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் மேல் விசாரணைக்காக சுகாதார அறிவியல் ஆணையத்திடம் (HSA) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் எல்லைகளைப் பாதுகாப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் அதே வேளையில், சட்டப்பூர்வமான வர்த்தகம் மற்றும் பயணம் சுமூகமாக நடைபெறுவதையும் உறுதி செய்வோம் என்று ICA கூறியுள்ளது.