உட்லேண்ட்ஸ் தொழிலாளர் தங்குமிடத்தில் போதைப்பொருள் சோதனை நான்கு வெளிநாட்டு நபர்கள் கைது!
சிங்கப்பூர் – உட்லேண்ட்ஸ் 1 பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் தங்குமிடத்தில் புதன்கிழமை (அக்டோபர் 22) நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது நான்கு வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
24 முதல் 36 வயதுக்குட்பட்ட இந்த ஆண்கள் சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் குற்றங்களுக்காகப் கைது செய்யப்பட்டனர்.
32 வயதுடைய ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது, மற்ற மூவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.
சோதனையின் போது, அதிகாரிகள் சுமார் 68 கிராம் கஞ்சா, 18 கிராம் ஐஸ் (மெத்தாம்பேட்டமைன்), 29 யாபா மாத்திரைகள் மற்றும் பல்வேறு போதைப்பொருள் பொருட்களைக் கண்டுபிடித்தனர்.
நான்கு சந்தேக நபர்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக CNB தெரிவித்துள்ளது.