கேலாங்கில் 67 வயது முதியவரை தாக்கிய 40 வயது நபர் கைது!

0

கேலாங்கில் 67 வயது முதியவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த 40 வயது நபர் ஆகஸ்ட் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக இருக்கிறார்.

இந்த சம்பவமானது ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடந்தது, போலீசார் ஒரு சண்டை காரணமாக மதியம் 2:35 மணிக்கு கேலாங்க் ரோட்டிற்கு அழைக்கப்பட்டனர்.

முதியவர் தாக்கப்பட்டு காயங்களுடன் காணப்பட்டார் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி தனது காயங்களினால் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவத்தின் பின்னர் 40 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அவர் தீவிர காயம் ஏற்படுத்தியதாக குற்றத்திற்காக குற்றம் சாட்டப்படுவார், இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மற்றும்அபராதம் கிடைக்கும்.

Leave A Reply

Your email address will not be published.