பேடோக் கட்டுமான தளத்தில் விபத்து – தூக்கப்பட்ட கான்கிரீட் துண்டு கீழே விழுந்தது!
பிப்ரவரி 26 அன்று சிங்கப்பூரின் Bedokகில் கட்டுமானப் பணியின் போது ஒரு பெரிய கான்கிரீட் துண்டு விழுந்தது. பெடோக் சவுத் ப்ளாசம்ஸ் என்ற புதிய வீட்டுத் திட்டத்தில், தொழிலாளர்கள் கான்கிரீட்டை மேலே தூக்கிக் கொண்டிருந்த போது இது நடந்தது. அதிர்ஷ்டவசமாக, அது விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது ஏன் நடந்தது என்று அரசு வீட்டு வசதி நிறுவனமான HDB ஆராய்ந்து வருகிறது. தற்போது அந்த இடத்தில் கான்கிரீட் துண்டுகளை தூக்குவதை நிறுத்திவிட்டனர்.
ஒரு வீடியோவில் கான்கிரீட் ஏழு மாடிகளுக்கு மேல் உயரத்திலிருந்து விழுவதையும், தொழிலாளர்கள் அதைத் தவிர்க்க ஓடுவதையும் காட்டியது.
HDB பாதுகாப்பு மிக முக்கியமானது என்று கூறியுள்ளது மற்றும் இந்த சம்பவத்தை தீவிரமாகக் கணிப்பதாக தெரிவித்துள்ளது.
தொழில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகத் துறை சார்ந்த நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதாகவும் கூறியுள்ளது.
தங்கள் கட்டுமானப் பணியிடங்களில் இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நிகழாமல். இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
image the starits times