துவாஸில் உள்ள களஞ்சிய கட்டடத்தில் தீ விபத்து யாருக்கும் காயம் இல்லை!

0

இன்று (22 மே) காலை 10 மணியளவில் Tuas பகுதியில் உள்ள 4 Tuas Avenue 18-ல் அமைந்த ஒரு களஞ்சியகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

பழைய மற்றும் கைவிடப்பட்ட பொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தில், சுமார் 5 மீட்டர் அளவிலான ஒரு பகுதி தீயால் பாதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. தீயை கட்டுப்படுத்த இரண்டு தண்ணீர் பீய்க்கும் குழாய்கள் மற்றும் தொலைநிலையிலிருந்து இயக்கக்கூடிய ஒரு சிறப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

தீவிபத்தில் யாரும் காயமடையவில்லை என்பதும், தீ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.