ஜனவரி 1, 2026 முதல் வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அதிக அபராதம்!

0

2026 ஜனவரி 1 முதல், சிங்கப்பூரில் வேகக்கட்டுப்பாட்டை மீறுவோருக்கு புள்ளிகள் அதிகரிக்கப்படும் மற்றும் அபராதத் தொகையும் உயர்த்தப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எடுத்துக்காட்டாக, 20 கிமீ/மணிக்கு குறைவாகவே அதிகமாக ஓட்டினாலும் 4 புள்ளிகளில் இருந்து 6 புள்ளிகளாக அதிகரிக்கப்படும்.

41 முதல் 50 கிமீ/மணிக்கு மேல் ஓட்டினால் 18 புள்ளிகள் அதிகரிக்கப்படும் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும். வேக மீறல் மற்றும் வாகன வகையை பொருத்து, அபராதம் \$50 முதல் \$150 வரை உயரும்.

இந்த கடுமையான நடவடிக்கைகள், சிங்கப்பூரில் அதிகரித்துள்ள விபத்துகள் காரணமாகவே எடுக்கப்பட்டுள்ளன.

2024-இல் மட்டும் 142 பேர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதில் மூன்றில் ஒரு விபத்து வேகமாக ஓட்டியதாலேயே ஏற்பட்டது.

அதே ஆண்டில், வேக மீறல் குற்றங்கள் 1,92,000-ஐ எட்டியுள்ளது – இது 2023-ஐவிட இரண்டு மடங்காகும். 24 மாதங்களில் 24 புள்ளிகள் குறைக்கப்படும் ஓட்டுனர்களின் உரிமம் இடைநிறுத்தப்படும்.

உள்துறை அமைச்சகம், இந்த புதிய விதிகள் மக்கள் அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் 2026 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பாக ஓட்ட வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பான பயணத்திற்காக அரசு தொடர்ந்து சட்டங்களை சீர்திருத்தும் எனவும் கூறியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.