கெப்பல் சாலையில்விபத்தில் சிக்கிய சைக்கிள் ஓட்டுநர் போலீஸ் வாகனம் மோதிய தகவல் பின்னர் தெரிந்தது!
41வயது சைக்கிள் ஓட்டுநர், வெள்ளிக்கிழமை மதியம் (ஜூன் 6) கெப்பல் சாலையில் போலீஸ் வாகனம் அவரை மோதியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து பிற்பகல் 3.10 மணி அளவில், அவர் மரினா கோஸ்டல் எக்ஸ்பிரஸ்வே நோக்கி சென்று கொண்டிருந்த போது ஏற்பட்டது.
போலீஸ் வாகனத்தை, சிறப்பு நடவடிக்கை துறை சேர்ந்த 30 வயது போலீஸ் அதிகாரி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, அவர் யாரையும் மோதியதை அறியாமல் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் அவருடைய பிரிவைத் தொடர்புகொண்ட பிறகே அவர் திரும்பி வந்து விசாரணையில் கலந்து கொண்டார்.
சைக்கிள் ஓட்டுநர் அப்போது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் அதிகாரி தற்போது விசாரணைக்கு உதவுகிறார்.
கவனக்குறைவான ஓட்டத்திற்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம். மேலும், விசாரணை முடியும் வரை அவர் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.