கார் விற்பனைக்காக தாயின் கையெழுத்தை போலியாக உருவாக்கிய மகன் – 12 வார சிறைத்தண்டனை!
சிங்கப்பூரில், 33 வயதான லியூ குவேய் லியாங் என்பவர், தாய்லாந்து கிளப்புகளில் பாடகிகளுக்கு மாலைகள் வாங்கியதால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக தனது தாயின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி அவரது இரண்டு கார்களையும் விற்பனை செய்துள்ளார்.
Autoart Singapore என்ற கார் விற்பனை நிறுவனத்துடன் இணைந்து, தனது தாய்க்குச் சொந்தமான Rolls-Royce Dawn மற்றும் Mini Cooper SE ஆகிய கார்களை, முறையே $700,000 மற்றும் $130,000 க்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டார்.
விற்பனையாளரை ஏமாற்ற, அவர் தனது நண்பர் ஒருவரை தன் தாயைப் போல போனில் நடிக்க வைத்து விற்பனையை உறுதிப்படுத்தினார்.
போலி கையெழுத்து குற்றத்தை ஒப்புக்கொண்ட லியூவிற்கு 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, இருப்பினும் அவர் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
அவர் தனது தாயார் எங்கு இருக்கிறார் என்பது பற்றி பொய் சொல்லி, விற்பனை ஒப்பந்தங்களில் அவரது கையெழுத்தைப் போலியாக உருவாக்கியுள்ளார்.
அவரது நண்பர் கார் விற்பனையாளரிடம் போனில் தனது தாயாக நடித்ததையடுத்து, இரண்டு கார்களுக்கும் $150,000 டெபாசிட் செலுத்தப்பட்டிருந்தது.
பின்னர் அவரது தாய் போலீஸ் புகார் வாபஸ் பெற்றதோடு அந்த டெபாசிட்தையும் திருப்பிக் கொடுத்தாலும், நீதிமன்றம் போலித்தனத்தின் தீவிரத்தன்மையையும், தாய் மற்றும் கார் விற்பனையாளர் மீதான தாக்கத்தையும் வலியுறுத்தியது.