சிங்கப்பூரில் கட்டுமானத் தளங்களில் உயிரிழப்புகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அவசியம்!
சிங்கப்பூரில் 2023 ஆம் ஆண்டில், கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றப்படாததால் 20 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது 2022 விட இரண்டு பேர் அதிகம் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆய்வுகளில், தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததே விபத்துகளுக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளைத் தடுக்க மனிதவள அமைச்சகம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் 3,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன, இதில் 41 வேலைநிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்கள் எளிதில் சறுக்கி விழும் அபாயம் அதிகமுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு விதிமீறல்களை தவிர்க்க, கட்டுமான நிறுவனங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மனிதவள அமைச்சகம், பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
குறிப்பாக, உயரமான கட்டடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.