பணித்தளத்தில் மரணமடைந்த தொழிலாளி சிங்கப்பூரில் துயர சம்பவம்!

0

சிங்கப்பூரில் சீனாவைச் சேர்ந்த 35 வயதான கட்டுமானத் தொழிலாளி ஒருவர் சாங்கியில் உள்ள ஒரு பணித்தளத்தில் பின்னால் வந்த டம்ப் டிரக் மோதியதில் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து ஆகஸ்ட் 28 அன்று மாலை 5:50 மணியளவில் தனா மேரா கடற்கரை சாலை மற்றும் சாங்கி ஈஸ்ட் டிரைவ்வில் நிகழ்ந்தது.

ஹுவா ஹாவ் டெவலப்மென்ட் நிறுவனத்தில் பணிபுரியும் சீன நாட்டு தொழிலாளி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது. 36 வயதுடைய நபர் ஒருவரின் அவசர அல்லது அலட்சிய நடத்தை காரணமாக விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனிதவள அமைச்சகம் (MOM) இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, வாகனங்களைத் திருப்புவதற்கு உதவும் பயிற்சி பெற்ற வழிகாட்டியைப் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் முக்கியம் என்று வலியுறுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.