சிங்கப்பூரில் விபச்சாரம் தொடர்பாக 14 பேர் கைது!

0

சிங்கப்பூர் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் விபச்சாரச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 13 பெண்கள் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சிங்கப்பூரின் மையப் பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் $40,000 ரொக்கம், செல்போன்கள் மற்றும் விபச்சாரத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் மத்திய காவல் பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் பிராஸ் பாசா சாலை, ஹேவ்லாக் சாலை, ஷாங்காய் சாலை மற்றும் ஆர்ச்சர்ட் சாலை உள்ளிட்ட பகுதிகள் குறிவைக்கப்பட்டன.

அறுபது வயதுடைய நபர் ஒருவர் மீது ஆன்லைன் விபச்சார வலையமைப்பை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பெண்கள் சாசனத்தின் கீழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் $100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், சிங்கப்பூரில் வணிக ரீதியான பாலியல் சேவைகளை வழங்க அல்லது எளிதாக்க தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்துவது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்

Leave A Reply

Your email address will not be published.