கிராம மக்களை ஏற்றி சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து 20 பேர் பலி!
உத்திரபிரதேச மாநிலம், காஸ்கஞ்சில் ஏற்பட்ட பரிதாப விபத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். ‘மக் பூர்ணிமா’ நாளில் மத சடங்குக்காக கடர்கஞ்ச் காட் சென்றுகொண்டிருந்த டிராக்டர், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் குளத்தில் கவிழ்ந்ததில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தரியாவ்கஞ்ச் நிலையம் அருகே காலை 10 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. டிராக்டரில் பயணித்தவர்களில் 7 குழந்தைகள் மற்றும் 8 பெண்கள் அடங்குவர். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். உயிர் பிழைத்தவர்கள், முக்கியமாக ஏதா மாவட்டத்தின் காஹா கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அருகிலுள்ள படியாலி சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த விபத்து குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
image india.com