கெய்லாங்கில் சாலைத் தடுப்பை மீறிய மோட்டார்சைக்கிள் காருடன் விபத்து 20 வயது இளைஞர் உயிரிழப்பு!
சிங்கப்பூரில் மே 28ஆம் தேதி அதிகாலை, கெய்லாங்கில் ஒரு கார் மற்றும் மோட்டார்சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் 20 வயதுடைய ஒரு இளைஞர் உயிரிழந்தார்.
காலை 1.50 மணிக்கு கிலிமார்ட் சாலையில் போலீசார் சோதனைச் சாவடி அமைத்திருந்தபோது, அந்த இளைஞர் மோட்டார் வாகனத்தை சாவடிக்கு முன் நிறுத்தினார்.
அப்போது போலீசார் அவரிடம் சென்று பேச முயன்றபோது, அவர் திடீரென வண்டியை வேகமாக ஓட்டிச் சென்று சிவப்பு விளக்கை மீறி கெய்லாங் சாலை சந்திப்பில் ஒரு காருடன் மோதி விபத்துக்குள்ளாகினார். விபத்தில் கார் பக்கவாட்டில் கவிழ்ந்தது சாலையில் இரத்தம் வழிந்திருப்பதையும் காண முடிந்தது.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உணர்விழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், பின்னர் அவர் உயிரிழந்தார்.
64 வயதுடைய கார் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.