கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்ட இளைஞன் அடித்துக் கொலை!
கர்நாடகாவின் மங்களூரு அருகே குடுப்பு கிராமத்தில் கடந்த ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடந்துள்ளது.
கிரிக்கெட் போட்டியின் போது, ஒரு நபர் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த 25 பேர் கொண்ட ஒரு குழு அவரை தாக்கியது.
மாலை 5 மணிக்கு ஒரு கோவிலருகே அவர் படுகாயமடைந்து கிடந்ததை பார்த்தவர்கள், அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், கடுமையாக தாக்கப்பட்டு பல காயங்களால் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிந்த 15 பேரை கைது செய்துள்ளதுடன், மேலும் 10 பேரை தேடி வருகின்றனர்.