பெங்களூரில் உள்ள ‘இராமேஸ்வரம் கஃபே’யில் இன்று குண்டுவெடிப்பு! சிசிடிவி காட்சிகள் வெளியீடு.
இன்று பெங்களூருவின் புகழ்பெற்ற ‘இராமேஸ்வரம் கஃபே’யில் நடந்த வெடி விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளில் அந்த சம்பவம் தெளிவாக பதிவாகி இருக்கிறது.
இது குண்டுவெடிப்பு என்பதை கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை, மக்கள் அச்சப்பட வேண்டாம் என துணை முதல்வர் டி.கே.சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்காக சிசிடிவி காட்சிகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
image Livemint.