கடன் பிரச்சனை: சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உயர்நீதிமன்ற உத்தரவு!

0

சென்னை உயர் நீதிமன்றம், பிரபல நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. அவரது பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி நடத்தும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம், ஜகஜால கில்லாடி படத்திற்காக 3.74 கோடி ரூபாய் கடன் எடுத்திருந்தது. இந்த தொகையை 30% வட்டியுடன் திருப்பி செலுத்துவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், முழுவதுமாக செலுத்தப்படவில்லை.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். அவர், படத்தின் உரிமைகளை கடன் வழங்கிய தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்து, அதை விற்று கடனை ஈடு செய்ய உத்தரவிட்டார். ஆனால் தயாரிப்பு நிறுவனம், படம் முழுமையாக தயாராகவில்லை என்று கூறி உரிமைகளை வழங்க மறுத்ததால், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தயாரிப்பு நிறுவனத்துக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டாலும், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதனால், சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை மார்ச் 5க்கு ஒத்திவைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.