புங்கொல் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நால்வர் பத்திரமாக மீட்பு மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை (ஆகஸ்ட் 6), புங்கொல்லில் உள்ள வாட்டர்வுட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரவு சுமார் 7 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டின் வரவேற்பறையில் நான்கு பேர் சிக்கியிருந்ததை கண்ட தீயணைப்பு வீரர்கள், உடனடியாக அவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
மீட்கப்பட்ட நான்கு பேரும் அவர்களில் இருவர் கே.கே. பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கும், ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கும் புகை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நான்காவது நபர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டார்.
பாதுகாப்பு நடவடிக்கையாக, கட்டிடத்தில் இருந்த சுமார் 100 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.