சிங்கப்பூருக்குள் போதைப்பொருட்களை கடத்திய 2 மலேசியர்கள் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் கைது செய்யப்பட்டனர்.
இரண்டு மலேசியர்கள் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போதைப்பொருள் கடத்த முயன்றபோது பிடிபட்டனர்.
ஜூலை 31 அன்று, 33 வயது மதிக்கத்தக்க ஒருவர், சுமார் 414 கிராம் “ஐஸ்” மற்றும் 46 கிராம் எக்ஸ்டஸி ஆகிய போதைப்பொருட்களை ஒரு குடுவையிலும், தனது மறைவான பகுதியிலும் மறைத்து கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டார்.
அதே நாளில், மேலதிக விசாரணைகளின் போது, 52 வயதுடைய சிங்கப்பூர் நாட்டவர் ஒருவர் பிராஸ் பசா அருகே கைது செய்யப்பட்டார். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 52,000 சிங்கப்பூர் டாலருக்கும் அதிகம்.
ஆகஸ்ட் 2 அன்று நடந்த இரண்டாவது சம்பவத்தில், 36 வயதுடைய மற்றொரு மலேசியர் தனது மோட்டார் சைக்கிளின் பின் பெட்டியில் சுமார் 4,149 கிராம் கஞ்சா மற்றும் 10 கிராம் கெட்டமைன் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தபோது பிடிபட்டார்.
அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் இந்தப் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மதிப்பு 100,000 சிங்கப்பூர் டாலருக்கும் மேல் இருக்கும் என்றும், இது நூற்றுக்கணக்கான போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு போதுமானதாக இருந்திருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன. சிங்கப்பூரின் கடுமையான போதைப்பொருள் சட்டங்களின் கீழ், பெரிய அளவில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் பொதுமக்களுக்கு மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளனர்.
இது போன்ற கடத்தல் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என பொதுமக்களை கேட்டுக் கொள்கிறனர்.