அதிர்ச்சியூட்டும் சம்பவம் பாலர் பள்ளியில் குழந்தைக்கு கொடுமை!

0

வடகிழக்கில் உள்ள ஒரு பாலர் பள்ளியில் சிறுவன் ஒருவன் தனது ஆசிரியர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவனை இருட்டறையில் அடைத்தல், உடல் ரீதியிலான துன்புறுத்தல் மற்றும் வார்த்தைகளால் திட்டுதல் போன்ற கொடுமைகள் நடந்ததாக கூறப்படுகிறது. தன் மகனின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த அவனது தாய், மகனிடம் விசாரித்தபோது இந்த கொடூரச் செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மூன்று ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. குழந்தைப் பருவ வளர்ச்சி முகமையுடன் (ECDA) இணைந்து விசாரணையையும் தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனை சேவைகள் உட்பட தேவையான உதவிகளை வழங்குவதாகவும் பள்ளி உறுதியளித்துள்ளது.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெற்றோர் ஒருவரால் பகிரப்பட்ட பின்னர், மற்ற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு நடந்த இதுபோன்ற துன்புறுத்தல்களைப் பற்றி வெளிப்படையாக பேசத் தொடங்கினர். ECDA இதில் விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட பணியாளர்களை இடைநீக்கம் செய்ததுடன், பாலர் பள்ளிகளில் குழந்தைகளின் நலனைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. குழந்தைகள் தவறாக நடத்தப்படுவதாகச் சந்தேகித்தால், ECDA அல்லது காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

image the straits times

Leave A Reply

Your email address will not be published.