சிங்கப்பூரில் சடலம் மீட்பு உடலின் கடும் துர்நாற்றம் பரபரப்பை ஏற்படுத்தியது!
சிங்கப்பூரில், சென்ட்ரல் விரைவுச்சாலையின் அருகே 36 வயதுடைய நபர் ஒருவரின் உடல் பிப்ரவரி 26-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. வழக்கமான பகுதி சோதனையில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் குழு இந்த சடலத்தை முதலில் பார்த்தது. இந்த இடம் குறுகலானதாக, ஒதுங்கியதாக இருந்ததாகவும், சுற்றியிருந்த குடியிருப்புகளில் இருந்து அறுபது மீட்டர் தூரத்தில் இருந்ததாகவும் விவரிக்கப்படுகிறது.
சின் மின் டெய்லி நியூஸ் படி, ஒரு வழிப்போக்கர் சாலையின் தடுப்பு கம்பியில் உடல் ஒன்று தொங்குவதைப் பார்த்துள்ளார். அந்தப் பகுதியில் பூச்சிகள் மொய்த்து, கடும் துர்நாற்றம் வீசியதாகக் கூறப்படுகிறது. ஒரு வேலியின் பின்னால் மரங்களுக்கு இடையில் இந்த உடல் மறைந்திருந்தது, கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்தது. உயரமான இடத்தில் தொங்கிய உடலை மீட்க சிங்கப்பூர் தீயணைப்புப் படையினர் மரங்களை வெட்ட வேண்டியிருந்தது.
காலை 11:50 மணியளவில் காவல்துறை மற்றும் தீயணைப்புப் படைக்கு உதவிக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஆரம்பகட்ட விசாரணையில் இறப்பில் வேறு நபர் சம்பந்தப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. இருப்பினும், இந்த இறப்புக்கான காரணங்களை காவல்துறை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறது.