ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹாங்காங்கில் தரையிறங்கியது!

0

ஹாங்காங்கிலிருந்து புது தில்லிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை புறப்பட்ட சில நேரத்திலேயே மீண்டும் ஹாங்காங்குக்கு திரும்பிவந்தது.

விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை இருக்கலாம் என பைலட் சந்தேகித்ததால் இந்த முடிவை எடுத்தார்.

போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்த இந்த விமானம் மதியம் 12:16 மணிக்கு புறப்பட்டு, சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீண்டும் ஹாங்காங்கில் தரையிறங்கியது.

தற்போது இந்த விமானம் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா மற்றும் போயிங் நிறுவனங்கள் இதுவரை எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

பயணிகள் யாரும் காயமடையவோ, அவசர நிலை உருவாகவோ இல்லை.

Leave A Reply

Your email address will not be published.