ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசர தரையிறக்கம் 156 பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்!

0

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து புது தில்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.

AI 379 விமானம்
விமான நிலைய ஒடுபாதையில் இருந்து வானில் பறக்கத் தொடங்கிய 20 நிமிடங்களிலேயே, அந்த விமானம் அவசர அவசரமாக மீண்டும் புக்கெட் மாகாண விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது

அவசரகால நடைமுறைகளின்படி விமானத்தில் இருந்த 156 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமான கண்காணிப்பு தரவுகளின்படி, காலை 9:30 மணிக்கு புறப்பட்டு, அந்தமான் கடலில் வட்டமிட்டு திரும்பிய பின்னர் காணப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டல் குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை, மேலும் ஏர் இந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

Leave A Reply

Your email address will not be published.