‘சென்னை, சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும்’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர் உட்பட பல வெளிநாடுகளுக்கு நேரடி விமானங்களை இயக்கும், திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட உள்ளது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய மூன்று இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு கூடுதல் விமான சேவை வழங்கப்படும்.
அதன்படி, ஆகஸ்ட் 2ம் தேதி முதல் கொச்சி – சிங்கப்பூர் இடையே கூடுதல் விமான சேவை வழங்கப்படும்.சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர் இடையே செப்டம்பர் 2ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை வழங்கப்படும். ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முன் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும்.
திருச்சியில் இருந்து சிங்கப்பூர், துபாய் மற்றும் ஷார்ஜாவுக்கு வாரத்தில் 7 நாட்களும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நேரடி விமானங்களை இயக்கும்.
கொச்சியில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து கொச்சிக்கு தினசரி கூடுதல் விமானங்கள் வழங்கப்படும். இதேபோல், வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய ஆறு நாட்களில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை வழங்கப்படும்.
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திங்கள், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 6 கூடுதல் விமானங்கள் இயக்கப்படும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு நேரடி விமானங்களை இயக்கும். அத்துடன் திருச்சியில் இருந்து தோஹாவிற்கு நேரடி விமானங்களை இயக்கும்.
வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வாரத்தின் நான்கு கூடுதல் நாட்களில் ஹைதராபாத்தில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஹைதராபாத் விமானங்கள் இயக்கப்படும்.