துபாயிலிருந்து சிங்கப்பூர் விமானத்தில் வணிக வகுப்பு பயணியிடம் திருட்டு சீனப் பயணி கைது!

0

துபாயிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில், உறங்கிக் கொண்டிருந்த பயணியின் பையைத் திருட முயன்ற 25 வயது சீனப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அதிகாலை (ஆகஸ்ட் 8) வர்த்தக வகுப்புப் பிரிவில் இந்தப் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.

காவல்துறையினர் தெரிவித்த தகவல்படி, பாதிக்கப்பட்ட பயணி உறங்கிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவி ஒருவர் தலையின் மேலிருந்த பெட்டியில் இருந்து பையை எடுப்பதைக் கவனித்துள்ளார். அவர் உடனே அந்த நபரிடம் கேள்வி எழுப்பவே, அவர் பையை மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டார்.

விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமான நிலைய காவல்துறையினரிடம் அந்த நபர் சரியான விளக்கம் அளிக்கத் தவறிவிட்டார். தனது அடுத்த விமானத்தைப் பிடிப்பதற்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்படும். இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Leave A Reply

Your email address will not be published.