கோவை சுவரோவியம் தோசை, பானி பூரி, ஆடு… சிங்கப்பூர் கலைஞரின் கலாச்சார ஓவியம்!
சிங்கப்பூர் கலைஞர் யிப் யூ சாங், சமீபத்தில் கோயம்புத்தூரில் அன்றாட வாழ்வின் காட்சிகளால் ஈர்க்கப்பட்ட சுவரோவியம் ஒன்றை வரைந்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் மலேசிய தமிழர்களின் வேர்கள் மிகுந்த தமிழ்நாட்டிற்கு இது அவருடைய முதல் பயணமாகும்.
ஒன்றரை வாரம் தங்கியிருந்த காலத்தில், 15மீ x 14மீ அளவில் ஒரு சுவரோவியத்தை வரைந்தார். அதில் குளிர்பானம் விற்பவரையும், தோசை சுடும் பெண்ணையும், ஏன், பானி பூரி விற்கும் கடைக்காரரையும் கூட வண்ணமயமாகச் சித்தரித்து இருந்தார்.
யிப் யூ சாங் உள்ளூர் மக்களுடன் உரையாடுவதை ரசித்தார். அவர்களின் ஆர்வத்திற்காக ஆடு ஒன்றையும், பூனை ஒன்றையும் அந்த சித்திரத்தில் சேர்த்துக் கொண்டார்.
அந்த வழியாகச் செல்பவர்கள் கூட, தோசைக்கான கரண்டியின் வடிவம் போன்ற நுணுக்கமான விஷயங்களைத் திருத்திச் சொல்ல உதவினர். அவரது வண்ணமயமான சுவரோவியங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலம்.
பல நேரங்களில் காணொளிகளுக்குப் பின்னணியாகப் பயன்படுத்தப்பட்டு, உள்ளூர் நயத்தை இணையத்தில் கூட்டுகின்றன.
முன்னாள் கணக்கராக இருந்த யிப் யூ சாங், தன் குழந்தைகள் வளர்ந்த நிலையில், 2018-ல் முழுநேர ஓவியக்கலைஞராக மாறினார். இனி தன் கனவைத் தொடரும் வாய்ப்பாக இதைக் கருதுகிறார்.
1970-80 காலகட்டத்து சிங்கப்பூரின் காட்சிகள் அடங்கிய 60 மீ அளவிலான ஓவியம் அவரது முந்தைய படைப்புகளில் ஒன்று.
கோவையில் தங்கியிருந்தபோது உள்ளூர் தோசை போன்ற பலகாரங்களைச் சுவைத்து, புலம்பெயர்ந்த தமிழர்களிடையேயான கலாச்சார ஒற்றுமைகள் மற்றும் மாற்றங்களை அவதானித்தார்.
image the straits times