சாலையோரம் தேநீர் அருந்தியபில் கேட்ஸ்!
சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் பங்கேற்ற பில் கேட்ஸ், இந்தியாவின் அத்தியாவசிய பானமான தேநீர் மீதான தன் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். பால், தேயிலைத் தூள், ஏலக்காய், இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் தேநீரின் மயக்கும் சுவையை அவர் வியந்து பாராட்டுகிறார்.
இந்தியாவுக்கு வந்திருந்த போது, நாக்பூரில் தனது சாலைக்கடையில் வித்தியாசமான முறையில் தேநீர் தயாரிக்கும் டோலி சாய்வாலியிடம் தேநீர் வாங்கி அருந்தினார் பில் கேட்ஸ். இணையத்தில் பிரபலமான டோலியின் தேநீர் தயாரிப்பு நுட்பமும் இந்த சந்திப்புக்கான ஆர்வத்தை உயர்த்தியது.
திருமண விழாவுக்காக இந்தியா வந்த பில் கேட்ஸ், டோலியின் தேநீரை சுவைத்தது இந்தியாவின் அபரிமிதமான புதுமை கண்டுபிடிப்புகளுக்கு சாட்சியாக உள்ளது. கேட்ஸ் டோலி சாய்வாலியிடம் தேநீர் அருந்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, டோலியை ஒரே இரவில் நட்சத்திரமாக்கியது. இது பலரையும் டோலி யார் என்று தேட வைத்துள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் கூட சாலைக்கடை தேநீரை தேடி வரும் அளவுக்கு, அந்த தொழிலில் இருக்கும் ஆர்வம் தான் டோலியின் வெற்றிக்கு காரணம் என்பதை இந்த சம்பவம் பறைசாற்றுகிறது.
image news 18 tamil