குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து கிளார்க் கீ பகுதியில் கார் கவிழ்ந்து ஓட்டுநர் கைது!

0

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இரவு, கிளார்க் கீ சென்ட்ரல் அருகே, தனது காரை மதுபோதையில் ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய 43 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்விபத்து யூ டோங் சென் தெருவில், விக்டோரியா தெருவை நோக்கி சென்றுகொண்டிருந்த இரு கார்களுக்கு இடையே இரவு 8 மணியளவில் நிகழ்ந்தது.

விபத்து நடந்த இடத்தின் புகைப்படங்களில், கவிழ்ந்து கிடக்கும் வெள்ளை நிற டொயோட்டா காரும், முன்பக்க இடது பகுதியில் சேதமடைந்த ஒரு நீல நிற காரும் தென்படுகின்றன.

மூன்று பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை உறுதிப்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.