மின்சார வாகனம் தீப்பற்றி எரிந்தது 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

0

சிங்கப்பூரின் கிளிமெண்டி பகுதியில் பயங்கர சம்பவம் ஒன்று அரங்கேறியது.

கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிற்பகல் 2:10 மணியளவில், கிளிமெண்டி வெஸ்ட் ஸ்ட்ரீட் 2, பிளாக் 706-ல் உள்ள ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தால் இயங்கும் தனிநபர் வாகனம் (PMA) தீப்பற்றி எரியத் தொடங்கியது. நான்காவது மாடியில் உள்ள அந்த குடியிருப்பில் இருந்து கரும்புகை வானை மறைத்தது.

அதிர்ஷ்டவசமாக, சிங்கப்பூர் தீயணைப்புப் படை (SCDF) விரைந்து வரும் முன்பே அங்கு வசித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி விட்டனர்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மின்சார வாகனம் சார்ஜ் செய்யப்பட்ட அறையில்தான் இந்தத் தீ விபத்து தொடங்கியிருக்கிறது. நெருப்பின் தீவிரத்தால் அந்த வீட்டின் வரவேற்பறையும் சேதமடைந்தது.

மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், அந்த வீட்டிலிருந்து மூன்று பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து, மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டியதன் அவசியத்தை மீண்டும் நினைவூட்டுகிறது.

தீ விபத்து ஏற்படாமல் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என்று SCDF பொதுமக்களை வலியுறுத்துகிறது.

Leave A Reply

Your email address will not be published.