நீட் பயிற்சித் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மகளை அடித்துக் கொன்ற தந்தை!
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியைச் சேர்ந்த தோண்டிராம் போஸ்லே, ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது மகள் சாதனா, 10ம் வகுப்பில் 92.60% மதிப்பெண்கள் பெற்ற சிறந்த மாணவி. இதனால், தந்தை அவளை மருத்துவராக்க விரும்பினார். அதற்காக, 12ம் வகுப்போடு நீட் தேர்வுக்கும் தயாராகச் செய்தார்.
சமீபத்தில், பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் சாதனாவுக்கு குறைந்த மதிப்பெண்கள் வந்தது. இதில் கோபமடைந்த தந்தை, கடந்த சனிக்கிழமை இரவு மகளை திட்டினார்.
பிறகு, மகள் எதிர்த்துப் பேசியதால் மகளை மரக்கட்டையால் அடித்துள்ளார். தாயும், சகோதரனும் தடுத்தும் பயனில்லை.
மறு நாள் பள்ளியில் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த தந்தை, வீடு திரும்பியபோது மகளை குளியலறையில் மயக்க நிலையில் கண்டார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அதற்குள் சாதனா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காயம் காரணமாக மரணம் ஏற்பட்டது என பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
தாயின் புகாரின் பேரில், தந்தை தோண்டிராம் போஸ்லேவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.