சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் திருட்டு குற்றச்சாட்டில் வெளிநாட்டு பெண் கைது!
51 வயதான ஒரு ஆஸ்திரேலிய பெண், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் உள்ள மருந்தகத்தில் இருந்து ஊட்டச்சத்து (ஹெல்த் சப்ப்ளிமென்ட்) பெட்டியை திருடியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெட்டி சுமார் 500 சிங்கப்பூர் டாலர் (அமெரிக்க பணத்தில் சுமார் 385 டாலர்) மதிப்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஏப்ரல் 14 அன்று, டெர்மினல் 1 பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
போலீஸார் தெரிவித்ததன்படி, திருட்டு நடந்த நேரத்தில் அந்த பெண் ஏற்கனவே சிங்கப்பூரை விட்டு புறப்பட்டுவிட்டார். மருந்தக ஊழியர்கள் சில வாரங்கள் கழித்து பொருள் காணாமல் போனதை கவனித்து, மே 7 அன்று புகார் அளித்தனர். பாதுகாப்புக் கேமரா (CCTV) காட்சிகளில், அந்த பெண் பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறியதைப் போல தெரிந்தது.
பின்னர் நவம்பர் 2 அன்று மற்றொரு விமானப் பயணத்திற்காக சிங்கப்பூர் திரும்பியபோது, அதிகாரிகள் அவரை கைது செய்தனர். வரும் நவம்பர் 12 அன்று அவர்மீது திருட்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.