யிஷூன் பிளாட் தீ விபத்தில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்!
இன்று (நவம்பர் 5) அதிகாலை, யிஷூன் தெரு 44, பிளாக் 475B இன் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு பிளாட்டில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்திலிருந்து சுமார் 40 குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) படி, அதிகாலை 2.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அது விரைவாக அணைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. புகையை சுவாசித்த நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
முதற்கட்ட சோதனைகளில், வரவேற்பறையில் இருந்த ஒரு தனிநபர் நடமாட்ட சாதனம் Personal Mobility Aid (PMA) இலிருந்து தீ தொடங்கியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகின்றன.