பெப்ரவரியில் சிங்கப்பூர் வருபவரா இருந்தால் இந்த ஆவணங்களை கட்டாயம் வைத்திருங்கள்

0

பல நபர்கள் சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பெப்ரவரியில் தமிழ்நாட்டிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து சிங்கப்பூர் வருவதற்கு தேவைப்படும் ஆவணங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு இங்கே பதில் உள்ளது.

Work, Tour, Study எனப் பல்வேறு காரணங்களுக்காக பல இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் வருகின்றனர். SPass, EPass, Tourist Visa, Student Visa, TWPகள் மற்றும் TEPகள் என பல்வேறு Pass உள்ளன. குடிவரவு அதிகாரிகள் உங்களது வருகைக்கான ஆவணங்களைக் கோருவார்கள்.

சிங்கப்பூரில் போலி ஏஜன்சி மூலம் ஏமாறாமல் மனிதவள அமைச்சினால் உறுதிப்படுத்தப்பட்ட ஏஜன்சிகளை அறிந்து கொள்ளுங்கள்

முதலில் உங்கள் பாஸ்போர்ட்டை கவனமாக கையில் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து சிங்கப்பூர் செல்வதற்கான காரணத்தின் அடிப்படையில் உங்களுக்கு வழங்கப்பட்ட விசாவைக் காட்டுங்கள். 

தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ் அச்சிடப்பட்டு வைத்திருக்க வேண்டும். இந்தியாவினால் வழங்கப்பட்ட சான்றிதழுக்குப் பதிலாக, அது சர்வதேசச் சான்றிதழாக இருக்க வேண்டும். உங்கள் தந்தையின் பெயர் உங்கள் பெயரின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பாஸ்போர்ட் எண் மற்றும் பிறந்த தேதி இரண்டும் சான்றிதழில் பட்டியலிடப்பட வேண்டும்.

அடுத்து சிங்கப்பூருக்கான வருகை அட்டை(arrival card) மற்றும் டிக்கெட் வைத்திருக்க வேண்டும். இது தேவையில்லை என்றாலும், சிங்கப்பூர் வருகை அட்டையை எடுத்துச் செல்வது நல்லது. டூரிஸ்ட் விசா உள்ள பார்வையாளர்கள் வரும்போது Return டிக்கெட் வைத்திருக்க வேண்டும். 

Work Permit, PCM, shipyard ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட ஆவணங்களை கொண்டு வர வேண்டும். 

சிங்கப்பூரில் வேலை தேடி கிடைக்கவில்லையா? இந்த கம்பனிகளுக்கு Apply செய்து பாருங்கள்

தனிமைப்படுத்தல் காரணமாக, நீங்கள் கப்பலில் மூன்று நாட்கள் செலவிடுவீர்கள். சிங்கப்பூர் வேலைவாய்ப்புக்கு புதிதாக வருபவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்த அனைத்து ஆவணங்களின் அச்சு நகல்களையும் கையோடு வைத்திருங்கள்.

Leave A Reply

Your email address will not be published.