இலங்கை கொத்மலையில் பஸ் விபத்து 22 பேர் உயிரிழப்பு!
கொத்மலையில், எல்லே அருகே இன்று அதிகாலை ஒரு பஸ் சாலையை விட்டு வழுக்கி ஆழமான குன்றில் விழுந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
பஸ்ஸில் 70க்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இந்த பஸ் நேற்று இரவு 10 மணிக்கு கதிர்காமத்தில் இருந்து கிளம்பி குருநாகலை நோக்கி சென்றது. ஆறு மணி நேரம் பயணித்த பிறகு விபத்து ஏற்பட்டது. பேருந்தில் குழந்தைகளும் இருந்தனர்.
விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகவில்லை. ஓட்டுநர் தூங்கிவிட்டதா அல்லது உடல்நிலை பாதிப்பா என்பதைக் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16 ஆண்டுகள் அனுபவமுள்ள 44 வயதுடைய ஓட்டுநரும் உயிரிழந்துள்ளார். பேருந்து நடத்துனர் தீவிர காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார்.
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.