இந்தியாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம் – சிங்கப்பூர் வருவோருக்கு மகிழ்ச்சி..!

0

கிறுமித்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலக நாடுகளுக்கான விமான சேவையானது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

indigo

தொற்று பரவல் காரணமாக 2020 மார்ச்சில் பெறும்பாலான நாடுகளுக்கான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும் சில நாடுகளுக்கான குறிப்பிட்ட விமானப் பயணம் இடம்பெற்றது.

COVID-19 விதிமுறைகளில் தளர்வுகள் செய்யப்பட்டதை அடுத்து இந்திய மத்திய அரசானது விமான போக்குவரத்தை ஆரம்பிக்க அனுமதியளித்துள்ளது.

விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கைகளுக்கு சானிடைசர் இட்டு சுத்தப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் கேபின் குழு உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

முழுமையாக COVID-19 தடுப்பூசி ஏற்றிக்கொண்ட பயணிகள் 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் Pre-departure COVID-19 சோதனை மூலம் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்ற Long Term Pass வைத்திருப்பவர்கள், 13 முதல் 17 வயதுடைய Long Term Pass வைத்திருப்பவர்கள் மற்றும் Short Term Pass பார்வையாளர்கள் மற்ற செல்லுபடியாகும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி பெற்றவர்கள் மற்றும் 13 வயது மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அத்துடன் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித வரையரைகளும் இருக்காது.

singapore workers

அத்துடன் மனிதவள அமைச்சகமானது (MOM) அடுத்த மாதம் தொடக்கம் முதலாளிகள் தங்களது புலம்பெயர்ந்த ஊழியர்களுக்காக முதன்மை பராமரிப்புத் திட்டத்தை (Primary care plan) கட்டாயம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் Work Pass அனுமதிக்கான தேவைகளின் ஒரு பங்காக கட்டாயம் பெற வேண்டுமென்று மனிதவள அமைச்சகம் கூறியது.

இது சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் எஸ் பாஸ் (S Pass) மற்றும் வேர்க் பர்மிட் (Work Permit) இது பொறுந்துமென்று அது குறிப்பிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.