இரு மார்க்கத்திலும் மதுரை-சிங்கப்பூர் விமான சேவை இன்று முதல் ஆரம்பம். பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி..!
மதுரை – சிங்கப்பூர் இடையே இருவழி போக்குவரத்தை Air India Express இன்று முதல் தமது விமான சேவையைத் தொடங்குகிறது.

மதுரை மற்றும் அதனை அண்டிய பகுதியில் உள்ளோர் சிங்கப்பூர் செல்ல முடியும்.
இவ் விமான சேவையானது VTL இனுள் அடங்காது. இது Non- VTL எனப்படும் விமான சேவையாகும்.
Air India Express இன் IX 684 எனும் விமானம் மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கும் IX 683 எனும் விமானம் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கும் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு இரவு 9:35 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4:30 மணிக்கு வந்தடையும். அத்துடன் சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு மாலை 6:40க்கு சென்றடையும்.

விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கைகளுக்கு சானிடைசர் இட்டு சுத்தப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் கேபின் குழு உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு ஆடைகளை அணிய வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளுக்கு மருத்துவ ரீதியாக தகுதியற்ற Long Term Pass வைத்திருப்பவர்கள், 13 முதல் 17 வயதுடைய Long Term Pass வைத்திருப்பவர்கள் மற்றும் Short Term Pass பார்வையாளர்கள் மற்ற செல்லுபடியாகும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.
முழுமையாக தடுப்பூசி போடாத நீண்ட கால அனுமதி பெற்றவர்கள் மற்றும் 13 வயது மற்றும் குறுகிய கால பார்வையாளர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அத்துடன் சிங்கப்பூர் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் ART சோதனை எடுக்க வேண்டிய அவசியமில்லை. அன்றாடம் சிங்கப்பூர் வருபவர்களின் எண்ணிக்கையில் எந்தவித வரையரைகளும் இருக்காது.