சிங்கப்பூருடன் வியட்நாமை இணைக்கும் புதிய கடலடி கேபிள்!

0

வியட்நாமின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வியட்லெல் (Viettel), சிங்கப்பூருடன் இணைக்கும் ஒரு புதிய கடலடி கேபிள் அமைப்பை உருவாக்க சிங்க் டெல்லுடன் (Singtel) ஒப்பந்தம் செய்துள்ளது.

வியட்நாம்-சிங்கப்பூர் கேபிள் சிஸ்டம் (VTS) என்று அழைக்கப்படும் இந்த கேபிள், 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் செயல்படத் தொடங்கும்.

இது எட்டு ஃபைபர் இணைகள் (fibre pairs) கொண்டதாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான இணைப்பை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்பத்தை இது பயன்படுத்தும்.

சிங்கப்பூரிலும், வியட்நாமிலும் உள்ள இணைப்பு நிலையங்களை (landing stations) முறையே சிங்க் டெல் மற்றும் வியட்லெல் நிர்வகிக்கும்.

கம்போடியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவிலும் VTSக்கு கிளை இணைப்பு நிலையங்கள் இருக்கும். வியட்நாமின் கடலடி கேபிள் அமைப்புகளை 2030 ஆம் ஆண்டிற்குள் 15 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த முயற்சி இணைந்துள்ளது.

குறைந்தபட்சம் 334 tbps திறனுடன் செயல்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. VTS ஆனது வியட்லெல்லின் சர்வதேச இணைப்பு திறனை கணிசமாக அதிகரிக்கும்.

இது அவர்களின் நெட்வொர்க் உள்கட்டமைப்பிற்கு அதிக வேகம், நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.

சிங்க் டெல் மற்றும் வியட்லெல் இடையே VTS தொடர்பான ஒத்துழைப்பு இரு நாடுகளின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைந்து ஒரு கேபிள் அமைப்பை உருவாக்குவது இதுவே முதல் முறையாகும்.

வியட்நாமின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை ஆதரிப்பதில் இந்த திட்டம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஏனெனில், இந்தப் பகுதியில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதால் அதிக அலைவரிசை மற்றும் குறைந்த தாமத இணைப்புக்கான தேவை அதிகரித்து வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.