ராஃபெல்ஸ் லிங்கில் நடந்த கலவரம் 23 முதல் 31 வயதுடைய நான்கு பேர் கைது!
கலவரத்தில் ஈடுபட்டதற்காக 23 முதல் 31 வயதுடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 14 அன்று அதிகாலை 3:05 மணியளவில் ராஃபிள்ஸ் லிங்கில் இந்த சம்பவம் நடந்தது. போலீசார் வந்தபோது, இரண்டு குழுக்கள் கூச்சலிடுவதையும், குறைந்தது ஐந்து பேர் உடல் ரீதியாக சண்டையிட்டுக் கொண்டிருப்பதையும் கண்டனர்.
எச்சரித்தும் குழுக்கள் அமைதி அடையவில்லை. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி உள்ளிட்ட பலத்தை பிரயோகிக்க வேண்டியதாயிற்று. சிலர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர்.
கலவரத்தில் ஈடுபட்டதாக நான்கு பேர் மீதும் இன்று (ஜூன் 15) குற்றம் சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் அனுபவிக்க நேரிடும். இதில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டுபிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.