சிங்கப்பூர் பெண்ணும் மலேசிய ஆணும் ஜோகூர் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலி!

0

மலேசியாவில் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் டிசம்பர் 24ஆம் தேதி மோட்டார் சைக்கிள் விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 29 வயது பெண்ணும், 28 வயது மலேசிய ஆணும் உயிரிழந்தனர்.

ஜோகூர் பாருவில் இருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்த இருவரும் விபத்துக்குள்ளானார்கள்.

இந்த விபத்து மாலை 5:24 மணிக்கு 130.1 கிமீ தொலைவில் நடந்தது. மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத்தில் உள்ள தடுப்புச்சுவரின் மீது மோதியது.

அந்த நபர் நெடுஞ்சாலையின் வலது பாதையில் வீசப்பட்டார், அதே நேரத்தில் பெண் தெற்குப் பாதையில் வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

குறிப்பாக விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வாகனங்களை கவனமாகவும் வேக வரம்புகளை பின்பற்றவும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.