சிங்கப்பூரில் ஏப்ரல் 22 அன்று PIE இல் பல வாகனங்கள் மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர்!

0

ஏப்ரல் 22-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு சிங்கப்பூரில் பான்-ஐலேண்ட் விரைவுச்சாலையில் (PIE) ஆறு கார்கள் மற்றும் ஒரு டாக்ஸி மோதி நேரிட்ட தொடர் விபத்தில், ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 9:40 மணியளவில் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை மற்றும் போலீஸாருக்கு விபத்து குறித்து தகவல் கிடைத்தது. 34 மற்றும் 37 வயதுடைய இரண்டு ஆண் ஓட்டுநர்களும், ஏழு முதல் 46 வயதுடைய நான்கு பெண் பயணிகளும் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதில் மூன்று பேர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், மற்ற மூன்று பேர் எங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

டெலிகிராமில் வெளியான ஒரு காணொளியில், சிவப்பு டிரான்ஸ்-கேப் டாக்ஸி உட்பட ஆறு வாகனங்கள் விரைவுச்சாலையின் இரண்டு இடது வழிகளை மறித்துக் கொண்டிருந்தன. குறைந்தது நான்கு கார்கள் கடுமையான சேதமடைந்திருந்தன.

போலீஸ், தீயணைப்பு வண்டிகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.