யூடியூப் வீடியோவை பார்த்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி கைது!
ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில், யூடியூப் வீடியோ பார்த்ததையடுத்து தனது கணவரை கொலை செய்ய முயன்ற ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணீஷ் மற்றும் சரோஜ் ரத்தோட் என்ற தம்பதியர் கடந்த சில நாட்களாக அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டு வந்தனர்.
ஒரு இரவு, கணவர் மணீஷ் தூங்கிக் கொண்டிருந்தபோது, மனைவி சரோஜ் அவரது மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி, வீட்டை வெளியே பூட்டிவிட்டார். வலியால் அலறிய மணீஷையும், அழுதுகொண்டிருந்த அவர்களது குழந்தைகளையும் பொருட்படுத்தாமல் சரோஜ் கதவைத் திறக்க மறுத்தார்.
பின்னர், அவரின் சகோதரி உதவியுடன் மணீஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில், சரோஜ் தனது கள்ளக்காதலன் ராம்சேவக் என்பவருடன் வாழவேண்டும் என்பதற்காக இந்த கொலை முயற்சியை திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், அவருடைய யூடியூப் தேடல் historyல், “கணவரை கொல்வது எப்படி?”, “Boiling Oil Attack” போன்ற தலைப்புகளில் வீடியோக்கள் தேடப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது சரோஜ் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.