மத்திய ஆபிரிக்க பள்ளி பரீட்சை நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல் 29 மாணவர்கள் பலி!

0

மத்திய ஆபிரிக்க குடியரசில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், கடந்த 25ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் பாங்குயில் உள்ள அந்த பள்ளியில் பரீட்சை நடைபெறும் போது, பள்ளியின் டிரான்ஸ்ஃபார்மர் திடீரென வெடித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டதால், பரீட்சை எழுதிய மாணவர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற முயற்சித்தனர்.

அதே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற முயற்சித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 29 பேர் உயிரிழந்ததுடன், 280 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நேர்ந்த பள்ளியில் 5,311 பேர் பரீட்சையில் பங்கேற்றிருந்தனர். இந்த துயர நிகழ்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி பாஸ்டின் டுடேரா, நாடு முழுவதும் மூன்று நாள் தேசிய துக்கம் அறிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.