கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் காலமானார்!
வாடிகனில் திங்கட்கிழமை காலை, 88 வயதான போப் பிரான்சிஸ் உயிரிழந்தார். இது குறித்து வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் மார்ச் 2013ல், முன்பிருந்த போப்பான பெனடிக்ட் XVI பதவி விலகிய பிறகு, கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது இயற்பெயர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ.
உயிரிழக்கும் 24 மணி நேரத்திற்கு முன்பு, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப், சக்கர நாற்காலியில் வந்தபடி மக்கள் கூட்டத்திற்கு ஆசீர்வாதம் வழங்கினார். குழந்தைகளுக்கும் ஆசிகள் வழங்கினார். “ஈஸ்டர் வாழ்த்துக்கள்” என்று மக்களை ஆசியுடன் வாழ்த்தினார்.
போப்பின் வாழ்க்கை முழுதும் கடவுளுக்கும் திருச்சபைக்கும் சேவைக்கே அர்ப்பணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.
உலகம் முழுவதும் பலர் அவரை அன்போடு நினைத்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.